கோவிட் தொற்று தொடர்பாக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 378 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 6,133 ஆக உயர்ந்துள்ளது.

அதே காலகட்டத்தில் குறைந்தது ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன. மூன்று பேர் கேரளாவிலும், இரண்டு பேர் கர்நாடகாவிலும் ஒருவர் தமிழ்நாட்டிலும் கோவிட்டினால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் மற்றும் நீரிழிவு மற்றும் சுவாச நோய்கள் போன்ற உடல்நலக் குறைபாடுகளைக் கொண்டிருந்தவர்களாவர்.