Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் 2 கோடி சொத்துக்கள் முடக்கம்

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் 2 கோடி சொத்துக்கள் முடக்கம்

1 day ago
in செய்திகள்

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் சுமார் 2 கோடி ரூபாய் இந்திய மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் சிக்கியவா்களின் சொத்துக்களே இவ்வாறு இந்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவால் முடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் சென்னை மண்டல அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சென்னை அருகே செங்குன்றத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தி வந்த ஒரு கும்பலை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1,470 கிலோ மெத்தம்பெட்டமைன், ரூ. 1.29 கோடி ரொக்கம், 30 ஆயிரம் அமெரிக்க டொலா், இலங்கை நாட்டின் ரூபாய் நோட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக அப்பிரிவு வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அந்த நபா்கள், ஹவாலா பணப்பரிமாற்றத்திலும் ஈடுபட்டிருப்பதும், அந்தக் கும்பல் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்துவதும், சிந்தட்டிக் வகை போதைப் பொருளை மையமாகக் கொண்டு கடத்தலில் ஈடுபடுவதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் முக்கிய எதிரிகளான நிசாருதீன், அவா் மனைவி ரபீயா சஹானா ஆகியோருக்கு சொந்தமான ரூ. 2 கோடி மதிப்புள்ள 11 வீட்டு மனைகள், விவசாய நிலம் ஆகியவற்றை போதைப் பொருள் தடுப்புச் சட்டம், கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி சட்டம் ஆகியவற்றின் கீழ் முடக்கப்பட்டதாக இந்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக இந்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தொடா்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சீனாவில் ஏஐ செயலிகளுக்கு தற்காலிக தடை
உலக செய்திகள்

சீனாவில் ஏஐ செயலிகளுக்கு தற்காலிக தடை

June 13, 2025
பருத்தித்துறை இராணுவ முகாமிற்கு அருகில் மனித எலும்புக்கூடு மீட்பு
செய்திகள்

பருத்தித்துறை இராணுவ முகாமிற்கு அருகில் மனித எலும்புக்கூடு மீட்பு

June 13, 2025
கனடாவில் அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து கிடந்த வீடு
உலக செய்திகள்

கனடாவில் அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து கிடந்த வீடு

June 13, 2025
உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைய வாய்ப்பு
செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைய வாய்ப்பு

June 13, 2025
சந்தேகத்தால் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்
செய்திகள்

சந்தேகத்தால் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்

June 13, 2025
நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே கடமையேற்பு
செய்திகள்

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே கடமையேற்பு

June 13, 2025
Next Post
தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவித்தல் சட்ட மூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவித்தல் சட்ட மூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.