யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களுடன், அவருடைய புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை நேற்று (11) விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இணுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் போலி உறுதிகளை நிறைவேற்றியதாக சட்டத்தரணியின் புகைப்படத்துடன் போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை தொடர்பில் சட்டத்தரணி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த வியடம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் சமூக வலைத்தள கணக்கு உரிமையாளரை ஞாயிற்றுக்கிழமை (08) பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் திங்கட்கிழமை (09) முற்படுத்திய நிலையில் , புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு புதன்கிழமை (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சந்தேக நபரை புதன்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.