கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வு விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
தொடர்புடைய அறிக்கையின்படி, விலங்குகள் தொடர்பிலான கணக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை கீழே காணலாம்
குரங்குகள் – 5.17 மில்லியன்
மந்திகள் – 1.74 மில்லியன்
மயில்கள் – 4.24 மில்லியன்
அணில்கள் – 2.66 மில்லியன்
நாடளாவிய ரீதியில் காணப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஏ.எஸ் சண்டிக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த கணக்கெடுப்பிற்காக 2.7 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, விவசாய பணிப்பாளர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.