Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழகம் கரூரில் கொலைசெய்துவிட்டு கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இலங்கை பெண்ணும் அவரது மகனும் கைது

தமிழகம் கரூரில் கொலைசெய்துவிட்டு கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இலங்கை பெண்ணும் அவரது மகனும் கைது

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழகம், கரூரில் இலங்கை பெண் ஒருவரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த 92 வயதுடைய ஞான சௌந்தரி என்னும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை வாழ்ந்துவந்துள்ளார். இவர்களது மகன்கள் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் ஞான சௌந்தரி மட்டும் வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார்.

இவரது வீட்டில் கரூரைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் (15) அதிகாலை ஞான சௌந்தரி படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த வேலைக்கார பெண் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி உறவினர்களும் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மூதாட்டி அணிந்திருந்த கம்மல், செயின் உள்ளிட்ட 7 1/2 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டனர்.

பின்னர் மூதாட்டி உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு இதுகுறித்து வழக்குபதிவு செய்த பொலிசார், வேலைக்கார பெண்ணிலிருந்து முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்தனர்.

குறித்த விசாரணையில் 92 வயது மூதாட்டியை தலையணையை தலையில் அழுத்தி கொலைசெய்து விட்டு அங்கு இருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுவிட்டு, மூதாட்டி இயற்கை மரணம் எய்துவிட்டார் என பணிப்பெண் நாடகமாடியுள்ளது தெரியவந்துள்ளதுடன், குறித்த நகைகளை அவர் தனது 36 வயது மகனிடம் ஒப்படைத்திருந்த நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்தபெண் இலங்கையைசேர்ந்தவர் என தற்போது மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், தங்க நகைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!

June 16, 2026
Next Post
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில் இன்று காலை தீ பரவல்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில் இன்று காலை தீ பரவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.