Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழகம் கரூரில் கொலைசெய்துவிட்டு கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இலங்கை பெண்ணும் அவரது மகனும் கைது

தமிழகம் கரூரில் கொலைசெய்துவிட்டு கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இலங்கை பெண்ணும் அவரது மகனும் கைது

10 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழகம், கரூரில் இலங்கை பெண் ஒருவரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த 92 வயதுடைய ஞான சௌந்தரி என்னும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை வாழ்ந்துவந்துள்ளார். இவர்களது மகன்கள் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் ஞான சௌந்தரி மட்டும் வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார்.

இவரது வீட்டில் கரூரைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் (15) அதிகாலை ஞான சௌந்தரி படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த வேலைக்கார பெண் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி உறவினர்களும் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மூதாட்டி அணிந்திருந்த கம்மல், செயின் உள்ளிட்ட 7 1/2 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டனர்.

பின்னர் மூதாட்டி உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு இதுகுறித்து வழக்குபதிவு செய்த பொலிசார், வேலைக்கார பெண்ணிலிருந்து முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்தனர்.

குறித்த விசாரணையில் 92 வயது மூதாட்டியை தலையணையை தலையில் அழுத்தி கொலைசெய்து விட்டு அங்கு இருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுவிட்டு, மூதாட்டி இயற்கை மரணம் எய்துவிட்டார் என பணிப்பெண் நாடகமாடியுள்ளது தெரியவந்துள்ளதுடன், குறித்த நகைகளை அவர் தனது 36 வயது மகனிடம் ஒப்படைத்திருந்த நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்தபெண் இலங்கையைசேர்ந்தவர் என தற்போது மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், தங்க நகைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கம்பஹாவில் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
செய்திகள்

கம்பஹாவில் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

June 16, 2025
இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபடவேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபடவேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

June 16, 2025
“கோவிந்தன் கருணாகரத்திற்கு எங்களுடன் தனிப்பட்ட குரோதம்”; சாணக்கியன்
அரசியல்

“கோவிந்தன் கருணாகரத்திற்கு எங்களுடன் தனிப்பட்ட குரோதம்”; சாணக்கியன்

June 16, 2025
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு
செய்திகள்

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு

June 16, 2025
விகாரையிலிருந்த புராதன முகமூடிகளை திருடிய தேரர் உட்பட மூவர் கைது
செய்திகள்

விகாரையிலிருந்த புராதன முகமூடிகளை திருடிய தேரர் உட்பட மூவர் கைது

June 16, 2025
இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு
உலக செய்திகள்

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

June 16, 2025
Next Post
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில் இன்று காலை தீ பரவல்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில் இன்று காலை தீ பரவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.