மட்டக்களப்பு கிராண் பகுதியில் மருந்தகம் நடத்தி வந்த மருத்துவர் ஒருவர், இளைஞர்களுக்கு மனநலம் பாதிக்கக்கூடிய மருந்துகளை விற்பனை செய்ததாகக் கூறி கைது கசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய உணவு மற்றும் மருந்து ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறை சிறப்புப் படையினர் கிராண் பகுதியில் கூட்டுச் சோதனை நடத்தி, இதன் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யயப்பட்டுள்ளார்.
அந்த அடிப்படையில் மருந்துச் சீட்டு இல்லாமல் இளைஞர்களுக்கு PREGAB 150mg என்ற மருந்து வழங்கியதற்காக மருந்தகத்தின் MBBS தகுதி பெற்ற குறித்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, இது தொடர்பான வழக்கு நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.