பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகள் இன்று புதன்கிழமை (18) காலை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே கைதிகள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்