இலங்கை மெதடிஸ்த வடக்குக் கிழக்குத் திரு மாவட்ட அவையின் 62 ஆவது கூட்டத் தொடர் நாளை(20) மற்றும் நாளை மறுதினம்(21) ஆகிய திகதிகளில் அம்பாறை மாவட்டம் கோமாரி சேகரத்தில் உள்ள கோமாரி திருச் சபையில் நடைபெறவுள்ளது.
இக் கூட்டத் தொடருக்கு அங்கத்தவர்கள் அனைவரும் தவறாது பங்குபற்றுமாறு வடக்குகிழக்குத் திருமாவட்ட அவை செயலாளர் அருகலாநிதி கே.எஸ்.நிசாந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த கூட்டத் தொடரில் நிர்வாகம், திருப்பணிகள் ஞாயிறு பாடசாலை மற்றும் கிறிஸ்த்தவ விழுமியங்களை வளர்ப்பதற்கான அடித்தளம் என்பன போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் எட்டபடவுள்ளது.
இந்நிகழ்வில் வடக்குக்கிழக்குத் திருமாவட்ட அவைத் தலைவர் அருட்திரு.ஏ.எஸ்.சாம் சுபேந்திரன் மற்றும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பேராயர் அருட்பணி கிங்சிலி வீரசிங்க ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
கடந்த வருடம் இவ் கூட்டத் தொடரானது வாழைச்சேனை சேகரத்தினால் கிரான் திருச்சபையில் நடைபெற்றது.








