அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தற்காலிக மரக்கறி விற்பனை நிலையம் என்ற போர்வையில் சூட்சமமாக போதைப்பொருள் விற்பனை செய்துவந்த சந்தேக நபர் நேற்று முன்தினம் (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த மரக்கறி விற்பனையில் ஈடுபட்டவர் தன்னை கைது செய்ய பொலிஸார் முயற்சிப்பதை கண்டு அருகில் உள்ள வயல்வெளிக்குள் தப்பி ஓடியுள்ளார்.
எனினும் புலனாய்வு பிரிவினரும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து கடும் சிரமத்துடன் சந்தேக நபரை பின்தொடர்ந்து கைது செய்தனர்.

அத்துடன் குறித்த மரக்கறி விற்பனை செய்யும் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பல பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








