இஸ்ரேலுக்காக உளவு பார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானிற்குள் கொலைகளை செய்வதற்கான சாதனங்களை கொண்டுவந்தவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது .
மதுபானங்களை நாட்டிற்குள் கொண்டுவருவது போல கொலை செய்வதற்கான ஆயுதங்களை நாட்டிற்குள் இவர்கள் கொண்டுவந்தனர் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாழ்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை கொலை செய்வதற்கு இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றுடன் சேர்த்து இதுவரை மொத்தம் ஆறு பேருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








