நாட்டில் போதுமான அரிசி கையிருப்பு இல்லாததாலும், கீரி சம்பா அரிசிக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், 40,000 மெற்றிக் தொன் கீரி சம்பா மற்றும் அதற்கு மாற்றாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் கூடிய உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுமார் 5,000 மெற்றிக் தொன் அரிசி அரசு நிறுவனங்கள் மூலமாகவும், மீதமுள்ளவை சந்தைத் தேவைகளின் அடிப்படையில் தனியார் துறை மூலம் இறக்குமதி செய்யப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.








