பிரான்ஸில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. பிரான்ஸில் ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்டோர் புகையிலை தொடர்பான நோயால் இறப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆண்டுக்கு சுமார் 75000 பேர் இறப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே புகைப்பிடிப்பதற்கு தடை விதிப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் பிரான்ஸில் பாடசாலைகள், பூங்காக்கள் மற்றும் கடற்கரை அருகே புகைப்பிடிப்பதற்கு தற்போது தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடையானது ஜூலை 1 முதல் அமுலுக்கு வருகின்றது. இது குறித்த அரசு அறிவிப்பு நேற்று (28) வெளியாகியுள்ளது.








