நாட்டில் தற்போது செம்மணி மனித புதைக்குழி விவகாரம் பெரிதும் பேசு பொருளாகியுள்ளதுடன், அதில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என மொத்தமாக 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த அகழ்வுப்பணிகள் இன்றும் தொடர்கின்றன.
இந்த நிலையில் தற்போது 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி ஒன்று தொடர்பான தகவல்கள் தற்போது மீண்டும் வைரலாகி வருகின்றது.
“திருகோணமலை நகரசபைக்கு சொந்தமான மெக்கெய்சர் விளையாட்டு மைதானம் கடந்த வருடம் புனரமைக்கும் போது சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து புனரமைப்பு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மனித எச்சங்கள் பரிசோதனைக்காக கொம்ழுபிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை மீண்டும் 06.07.2015 திங்கட்கிழமை திருகோணமலை நீதவான் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை நீதவான் ஈ. சரவணராஜா முன்னிலையில் இப்பணிகள் (08.07.2015 புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் பொலிஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
இதன்போது மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. அப் பகுதிக்கு நில ஆய்வாளர்கள், சட்டவைத்திய அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.

1990ம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின் போது திருகோணமலையில் தமிழ் இளைஞர்கள் பலர் காணாமற்போய் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகழ்வு பணி நடைபெறுவதையும், பொலிஸார் அங்கு நிறுத்தப்பட்டிருப்பதையும், மனித எச்சங்களையும் படங்களில் காணலாம் என்பதுடன் இது தொடர்பிலும் அரசு முழுமையான விசாரணை மேற்கொள்ளுமா என்று மக்கள் கேள்வி எழும்பியுள்ளனர்.









