Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மூதூர் கிழக்கு – சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (07) அன்று மாலை சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்களால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மூதூர் கிழக்கு – சம்பூரில் 1990ஆம் ஆண்டு ஜூலைமாதம் 7ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 57 பேர் உட்பட அதனை அண்மித்த காலப்பகுதியில் அப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்த நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்குமானஅஞ்சலி நிகழ்வும் இதன் போது நடைபெற்றது.

படுகொலைசெய்யப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலிசெலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,பெண் உரிமை பாதுகாவலர்கள், சிவில்அமைப்புகள், பிரதேச அரசியல்வாதிகள் உட்படபலரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இந்த கொடூரமான படுகொலை சம்பவத்தின் போது சீருடை அணிந்த, ஆயுதம் தாங்கிய படைகள்,பிற்பகல் 2 மணியளவில் சம்பூரில் அமைந்த குடியிருப்புகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் போது மக்கள் தங்கள் பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களுடன் சாக்கரவட்டவன் காட்டுப் பகுதிகளுக்குச் சென்று, பாதுகாப்பாக தஞ்சம் அடைந்தனர்.

பின்னர்,அவர்களை ஊருக்குள் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதும்,பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆலயங்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனால்,காட்டுக்குள் பதுங்கியிருந்த ஆண்களை பாதுகாப்புப் படைகள்வெட்டியும், சுட்டும், எரித்தும் படுகொலை செய்தனர்.

எனவும் இந்தக் கூட்டுப் படுகொலையின் 35 ஆண்டுகள் கடந்தும், மூதூர் கிழக்கு – சம்பூர் மக்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கவலையுடன் கண்ணீர் வடித்தனர்.

யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகின்ற நிலையிலும், நாட்டின் எந்தவொரு அரசும் இதுவரை உரியநீதிச் செயல்முறைகளை மேற்கொள்ளவில்லை. இந்நாளில், தற்போதைய அரசு, மூதூர் கிழக்கு சம்பூர் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

கடந்த யுத்த காலத்தில் மூதூர் கிழக்கு – சம்பூர்கிராமத்தில் இடம் பெற்ற படுகொலைச் சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள்,பெண்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
அரசியல்

தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

June 14, 2026
நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச
அரசியல்

நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச

June 14, 2026
கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
Next Post
முன்னாள் காதலனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த இளம்பெண்

முன்னாள் காதலனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த இளம்பெண்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.