மட்டக்களப்பின் சில நகர்ப்புறங்களில் அரச இலட்சனையோ, பொலிஸாரின் இலட்சனையோ பதிக்கப்படாத மற்றும் வெறும் குடும்ப விபரங்களை மட்டும் கோரி மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் வீடு வீடாக சென்று படிவம் ஒன்று விநியோகிக்கப்படுகிறது.
இந்தநிலையில் விண்ணம் பெற்றுக்கொண்ட சில குடும்பங்கள் battinaatham ஊடகத்துக்கு தொடர்பு கொண்டு “இவ்வாறான ஒரு படிவம் பொலிஸாரினால் விநியோகிக்கப்படுகிறது. அத்தோடு இதே போன்ற ஒரு படிவம் யுத்த காலத்திலும் விநியோகிக்கப்பட்டிருந்தது. இந்த படிவத்தை நிரப்பி பொலிஸாரிடம் ஒப்படைக்கலாமா என சிலர் வினவியிருந்தனர்.
இது தொடர்பில் எமது ஊடகம் , அரச தரப்பு எம்பி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இது தொடர்பில் எமக்கு எந்த தகவலும் தெரியாது என்றும், இது ஒரு தகவல் திரட்டுவதற்கான நடவடிக்கையாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.









