Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையான் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது பொய்; உதய கம்மன்பில

பிள்ளையான் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது பொய்; உதய கம்மன்பில

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் எதையும் கூறவில்லை என்றும், அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட தகவல் முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கடந்த 2025 ஏப்ரல் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, “பிள்ளையான் தடுப்புக் காவலில் இருக்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சில விவரங்களை முன்கூட்டியே வெளியிட்டார்” என தெரிவித்திருந்தார்.

இதைப் பற்றி கருத்து தெரிவித்த உதய கம்மன்பில கூறியதாவது,

“பிள்ளையான் மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படுவது பொய்யாகும். அவர் கைது செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் சம்பவம். இதை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி உறுதிப்படுத்தியுள்ளார். பிள்ளையான் மீது தாக்குதல் விசாரணை நடத்தப்படவில்லை; அவரிடம் அந்த தொடர்பில் எதுவும் கேட்கப்படவுமில்லை. அவர் வாக்குமூலம் தமிழில் அளிக்கப்பட்டு, நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அதில் எங்கும் குண்டுத் தாக்குதல் பற்றி குறிப்பிடப்படவில்லை.”

மேலும், “அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட குற்றச்சாட்டு பொய்யானது. ஜனாதிபதியையும் தவறான தகவலுக்கு வழி நடத்தியுள்ளது. அரச தரப்பில் அஸாத் மௌலானா போன்றோர் மூலம் பிள்ளையான் வாயிலாக இராணுவத்தினரிடம் தாக்குதல் புகார் சுமத்த முயற்சி நடைபெறுகிறது. பிள்ளையான் ஒரு தமிழர் மற்றும் இராணுவத்துடன் ஒத்துழைத்தவர் என்பதால் அவரை பலிகொடுக்க முயற்சி செய்யப்படுகிறது” எனவும் அவர் கூறினார்.

பிள்ளையான் கைது தொடர்பாக தற்போது இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இலங்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவர் தமிழில் வழங்கிய வாக்குமூலம், விசாரணை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, அந்த வாக்குமூலத்தில் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக எந்தவிதமான குறிப்பும் இல்லை என நீதிமன்ற ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.