புதிய இணைப்பு
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் பரவிய தீயை தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் சுமார் 2 மணித்தியாலம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.



முதல் இணைப்பு
மட்டக்களப்பு பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு அருகாமையிலுள்ள காணியினுள் சற்றுமுன்னர் (29) குப்பை பற்றவைத்த போது தீடீரென மரங்களில் தீ பரவியதால் அந்த இடத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது.
அருகில் பெட்ரோலியம் கார்ப்பரேசனும் பின்புறமாக ரயில் நிலைய எஞ்சின்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமையினால் உடனடியாக சம்பவ இடத்திற்கு தீ அணைக்கும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக்கொண்டிருப்பதுடன், மேலதிக உதவிகளுக்கு இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவர அணைத்து தரப்பினரும் முயற்சித்துக்கொண்டிருப்பதாக சம்பவ இடத்திலிருந்து எமது செய்தியாளர் தகவல் வழங்கினார்.








