Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இளைஞன் தற்கொலை

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இளைஞன் தற்கொலை

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரை மாய்த்து கொண்ட பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளமைக்கு கல்கிஸ்ஸை சட்டதரணிகள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் கீர்த்தி பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாவது,

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் சந்தேகநபர் உயிருடன் இல்லை. சிறைச்சாலையில் அடைக்கப்பட்டமையினால் மன உளைச்சலுக்குள்ளாகி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு மே மாதம் அன்று இலங்கை சட்டத்தின் கீழ் பிணையில் வெளி வரமுடியாத குற்றச் செயலான 3,200 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்ததாகக் கூறி தெஹிவளை பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மூன்று மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.

இரண்டு மாதங்கள் கழித்து, தான் நியாயமற்ற முறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் வழக்கு விசாரணை மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவர் எந்தவொரு போதைப்பொருளையும் தன்வசம் வைத்திருக்கவில்லை என்பதை அரசு பகுப்பாய்வாளரின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. துரதிர்ஷ்டவசமாக அவர் உயிருடன் இல்லை. உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தெஹிவளை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து போதைப்பொருள் வழக்குகளிலும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நீதவான் நீதிமன்றம் சந்தேக நபர்களை விடுவித்தது.

தவறுதலாக கைது செய்தல் மற்றும் தடுப்புக்காவல்களில் தடுத்து வைத்தல் என்பன அப்பாவி மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறான நடவடிக்கைகளால் அவர்களுக்கு வேலை இழப்புகள், குடும்பங்களில் விரிசல் மற்றும் பிள்ளைகள் புறக்கணித்தல் போன்ற துயர சம்பவங்கள் இடம்பெறும்.

இவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுதோடு மட்டுமல்லாமல், முறையற்ற விசாரணைகள் மற்றும் சட்ட செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதால் அவர்களின் வாழ்க்கை சரிசெய்ய முடியாத அளவுக்கு அழிக்கப்படுவதை நாம் காண்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்
செய்திகள்

NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்

June 18, 2026
கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!

June 18, 2026
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!
செய்திகள்

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

June 18, 2026
Next Post
சம்பூரில் மனித எச்சங்கள்; அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராய விசேட கூட்டம்

சம்பூரில் மனித எச்சங்கள்; அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராய விசேட கூட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.