செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தில் நடைபெறும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில், நேற்று (30) வரை 115 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் 102 மனித எச்சத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, நீதிமன்றக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. ஜூலை 29-ல் முன்னெடுக்கப்பட்ட அகழ்வில், பெரிய மனித எலும்புக்கூட்டுடன் குழந்தையின் எலும்புக்கூடு அரவணைக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டு, முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது.
நேற்று புதிதாக 4 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டு, 3 தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இத்தகவலை சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.








