களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கோவில் போரதீவு தொலைத் தொடர்பு கோபுரத்தில் இருந்த சுமார் 14 இலச்சம் ரூபா பெறுமதியான 44 பெற்றரிகளை விற்பனை செய்தவர் மற்றும் அதனை வாங்கி கொண்ட சம்மாந்துறை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஆகிய இருவரை இன்று வெள்ளிக்கிழமை (1) காலையில் களவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதுடன் சிறிய ரக வாகனம் ஒன்றை மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த தொலைத் தொடர்பு கோபுரத்தில் இருந்த பெற்றிகளை சம்பவதினமான இன்று வெள்ளிக்கிழமை (01)அங்கு கடமையாற்றி வந்த ஒருவர் பழைய இரும்பு விற்பனை வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அந்த பற்றிகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்த நிலையில் களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து அந்த வாகனத்தை பொலிசார் சுற்றிவழைத்து இடைமறித்து சோதனை மேற்கொண்ட போது திருடப்பட்ட பெற்றிகளை எடுத்து செல்வதை கண்டுபிடித்ததையடுத்து அந்த வாகன சாரதியை கைது செய்ததுடன் வாகனம் ஒன்றையும் 44 பற்றிகளையும் மீட்டனர்.
அதேவேளை தொலை தொடர்பு கோபுரத்தில் இருந்த பெற்றிகளை திருட்டுதனமாக விற்பனை செய்த அங்கு கடமையாற்றி வந்த ஒருவரை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணையின் பின்னர் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பெரும் குற்ற தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.








