49வது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு, கடந்த 7ஆம் தேதி திருகோணமலை உள்ளக விளையாட்டு அரங்கில் கிழக்கு மாகாண மட்ட கராத்தே சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், மாவட்ட மட்டத்தில் தெரிவாகிய மட்டக்களப்பு வீரர்கள் Kata, Team Kata, Kumite பிரிவுகளில் சிறப்பாகப் போட்டியிட்டு 07 தங்கப் பதக்கங்கள், 02 வெள்ளிப் பதக்கங்கள், 05 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 14 பதக்கங்களைப் பெற்று, கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை வழங்கிய பிரதான பயிற்றுவிப்பாளர் சென்செய் ஹர்சில்வா சில்வா, சென்செய் ரவிமணலன் கௌசிகன், செம்பை துஷ்யந்தன் துஷி ஆகியோருக்கும், வீரர்களை ஊக்குவித்த பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மற்றும் அனைத்து வெற்றியாளர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
மேலும், போட்டி ஏற்பாடுகளில் உதவிய மாவட்ட பிரதான விளையாட்டு உத்தியோகஸ்தர் ஜெயகுமார் மற்றும் அனைத்து நிர்வாகத்தினருக்கும் நன்றிகள் கூறப்பட்டன.
காலி நகரில் வரும் 2025 ஆகஸ்ட் 18, 19, 20 தேதிகளில் தேசிய மட்டப் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








