யாழ்ப்பாணத்தில் நேற்று (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 40 வயதான அற்புதராசா அகிலன் உயிரிழந்தார்.
தகவலின்படி, தாக்குதல் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். சந்தேகநபரை பிடிக்க முயன்ற நால்வர் மீதும் கத்திக்குத்து நடத்தப்பட்டு, அவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்ற நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








