மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில், ரயில் தண்டவாளத்தில் நின்று கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது, ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (10) பத்து இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த நாகேந்திரன் கரிகரராஜ் (வயது இருபத்து மூன்று) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின்படி, மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறினைத் தொடர்ந்து, அவர் நேற்று இரவு தண்டவாளத்தில் நின்று கொண்டு தொலைபேசியில் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து, சடலம் மீட்கப்பட்டு ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, ரயில் தொடர்ந்து கொழும்பு நோக்கி பயணித்தது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் மற்றும் கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.








