அம்பாறை மாவட்டம் வீரமுனை பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி இடம்பெற்ற 400க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் இனப்படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (12) நடைபெற்றது.
வீரமுனை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவேந்தர் தூபியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள் கவீந்திரன் கோடீஸ்வரன், டாக்டர் ஸ்ரீதர், ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், சிவில் சமூக செயற்பாட்டாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர். நிகழ்வு மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.
அதேசமயம் வரலாற்று குறிப்புகளின்படி, வீரமுனையில் ஆகஸ்ட் 12 திகதிக்கு முன்பும் பல்வேறு தேதிகளில் ஐந்து தடவைகள் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது
1990, ஜூன்20 – 69 தமிழர்
1990, ஜூலை05 – 13 தமிழர்
1990, ஜூலை10 – 15 தமிழர்
1990, ஜூலை26 – 23 தமிழர்
1990, ஜூலை29 – 1 தமிழர்
1990, ஆகஸ்ட்12 – 400 தமிழர்
மொத்தம் ஆறு தடவைகள் நடைபெற்ற இந்த இனப்படுகொலைகளுக்கும் 35 ஆண்டுகள் கடந்தும் எந்தவித நீதியும் வழங்கப்படாதது என்பதும் குறிப்பிடத்தக்கது.




















