கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் (ESDF) மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் இணைந்து, உள்ளூராட்சி விவகாரங்கள் தொடர்பான சட்ட அபிவிருத்தி செயலமர்வை மட்டக்களப்பு கிரீன் கார்டன் ஹோட்டலில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி தலைமையேற்றார்.
செயலமர்வில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற முதல்வர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மாநகர சபை ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில், உள்ளூராட்சி மன்ற முதல்வர்களின் பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் சார்பில் “இலங்கையின் உள்ளக ஆட்சிப் பொறிமுறைகளில் நலிவுற்ற சமூகக் குழுக்களின் அரசியல் உள்ளடக்கம் மற்றும் சமூகப் பிரச்சனைகள்” எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட பரப்புரைப் பத்திரம் அனைத்து உள்ளூராட்சி மன்ற முதல்வர்களுக்கும் வழங்கப்பட்டது.



















