Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல்; பொது பாதுகாப்பு அமைச்சர்

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல்; பொது பாதுகாப்பு அமைச்சர்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது பயனற்ற செயல் என பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி சமீபத்தில் முல்லைத்தீவில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கோரி வடக்கு மற்றும் கிழக்கில் ஹர்த்தால் நடத்தப்படும் என்று அறிவித்தது.

இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றிடம் பேசிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஹர்த்தால் நடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஹர்த்தால் நடத்தப்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அதை நடத்த எந்த காரணமும் இல்லை. சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளனர்.

ஹர்த்தால் நடந்தாலும் இல்லாவிட்டாலும், எங்களுக்கு வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. நீதிமன்ற உத்தரவுகளின்படி நாங்கள் அடுத்த நடவடிக்கை எடுப்போம். ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல்.

மேலும், இதேபோன்ற சம்பவங்கள் மற்ற மாகாணங்களிலும் நிகழ்கின்றன என்றும், ஆனால் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் ஹர்த்தால்களை நடத்துவதில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவங்களை இனம் அல்லது மதத்தின் பார்வையில் இருந்து நாம் பார்க்கக்கூடாது.

ஒரு குற்றம் நடக்கும்போது, பொறுப்பான எவருக்கும் எதிராக, அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் காவல்துறையினர் செயல்படுகிறார்கள்.

கடந்த சில மாதங்களாக இதை நடைமுறையில் நிரூபித்துள்ளோம்- என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!
செய்திகள்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!

June 19, 2026
நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு
செய்திகள்

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு

June 19, 2026
கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
செய்திகள்

கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

June 19, 2026
எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்
செய்திகள்

எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்

June 19, 2026
அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு
செய்திகள்

அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு

June 19, 2026
Next Post
யாழ்ப்பாணத்தில் இன்று தொடங்கும் இரண்டாவது சர்வதேச புத்தகத் திருவிழா

யாழ்ப்பாணத்தில் இன்று தொடங்கும் இரண்டாவது சர்வதேச புத்தகத் திருவிழா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.