Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சபை மீது குற்றச்சாட்டு

தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சபை மீது குற்றச்சாட்டு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபை அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதில்லை எனவும், உறுப்பினர்கள் சபைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வரக்கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை ஜனநாயகத்துக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் எதிரான அடக்குமுறை என அப்பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நேற்றையதினம் இடம்பெற்றது.

இதன்போது உறுப்பினர்களாகிய எமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடம் வழங்கப்படவில்லை. இதனால் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதுடன் தவிசாளர் என்னை தாக்கவும் முற்பட்டிருந்தார்.

இதன் காரணமாக நாங்கள் ஒன்பது உறுப்பினர்கள் சபையைவிட்டு வெளியேறியிருந்தோம்.

நாம் வெளியேறியதன் பின்னர் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இனிவரும் காலங்களில் சபை அமர்வுகளின் போது தவிசாளர், உபதவிசாளர் ஆகியோரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை என தவிசாளர் அவர்கள் சபையில் முன்வைத்த போது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இனிவரும் காலங்களில் சபை அமர்வுகளின் போது ஊடகங்கள் உட்பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என தவிசாளர் அவர்கள் சபையில் முன்வைத்த போது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது

இத்தீர்மானமானது எமது உரிமைகளை மீறும் செயல் என்பதுடன் ஊடக அடக்குமுறையுமாகும்.

சபையிலே இடம்பெறுகின்ற அதிகார துஸ்பிரயோகங்களும், அடக்குமுறைகளும், அடாவடிகளும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு எம்மை வெளியேற்றிவிட்டு இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அதிகார துஸ்பிரயோகங்களும், ஊழல்களும் இடம்பெற்றுவரும் நிலையில் சபையில் இடம்பெறும் விடயங்கள் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக இவ்வாறான தீர்மானங்களை எடுப்பது ஜனநாயக மீறலும், ஊடக அடக்குமுறையுமாகும்.

உள்ளுராட்சி மன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய இயங்காத இச்சபை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!
செய்திகள்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!

June 19, 2026
Next Post
நாட்டை கவிழ்க்க எதிர்கட்சியினர் தீட்டும் திட்டத்தை மக்களுடன் முறியடிப்போம்; எம்.பி கந்தசாமி பிரபு

நாட்டை கவிழ்க்க எதிர்கட்சியினர் தீட்டும் திட்டத்தை மக்களுடன் முறியடிப்போம்; எம்.பி கந்தசாமி பிரபு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.