புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஏரியில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் நீரில்
மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் இணைந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்த பின் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவன் புத்தளம் – கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் ஆவார்.
சிறுவன் தனது அத்தையுடன் ஏரியில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








