காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் பெயரில் வெளியாகியுள்ளதாக கூறப்படும் ஹர்த்தால் அறிவிப்பு போலியானது என்று சங்கம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்தக் கடிதம், வரும் 18.08.2025 ஹர்த்தால் குறித்து சங்கம் எதிர்ப்பு என தீர்மானம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. எனினும், சங்கம் வெளியிட்ட விளக்கத்தில்,
“ஹர்த்தால் தொடர்பாக எங்கள் சங்கம் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தற்போது பரவி வரும் அந்தக் கடிதம் முற்றிலும் பொய்யானது” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஹர்த்தால் குறித்த வதந்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் குறித்த ஹர்த்தால் தொடர்பான முடிவானது காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்சம்மேளன தலைமைகளால் மட்டுமே தீர்மானிக்கமுடியும் எனவும் அவ்வாறு ஒரு தீர்மானம் எடுக்கப்படும் பட்சத்தில் தங்களுடைய உத்தியோகப்பூர்வ பேஸ் புக் பக்கத்தில் வெளியிடுவோம் எனவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.








