மட்டக்களப்பில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு விவசாயிகள் எதிர்ப்பு என ஊடக அறிக்கை ஒன்றை கே.பிரகாஷ் என்பவர் வெளியிடப்பட்டுள்ளார். அந்த அறிக்கைக்கும் விவசாயிகளுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை, அவர் எந்த விவசாய சங்கத்திலும் பிரதிநிதி இல்லை. எனவே அவரின் அந்த கருத்தை வாகனேரி நீர்ப்பாசன திட்ட முகாமைத்துவ தலைவர் கிரான் கமநல அமைப்பின் தலைவர் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு வெய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் வாகனேரி நீர்ப்பாசன திட்ட முகாமைத்துவ தலைவர் சி.சண்கதாஸ், கிரான் கமநல அமைப்பின் தலைவர் சி.பவானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு இந்த கண்டனத்தை விடுத்துள்ளனர்.
“ஊடக செய்தி ஒன்றை நேற்றைய தினம் பார்த்தோம். அதில் நாளை நடைபெறுகின்ற ஹர்த்தாலுக்கு விவசாயிகள் எதிரானவர்கள் என கே. பிரகாஸ் என்பவர் ஊடக அறிக்கை விடுத்திருந்தார். அந்த அறிக்கைக்கும் எங்களது விவசாயிகளுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. அவர் விவசாயிகள் சங்கம் ஒன்றிலும் இல்லை எனவே அவரின் அந்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதேவேளை ஹர்த்தால் தொடர்பாக எவரும் ஆதரவு கேட்கவில்லை. விவசாயிகள் அதற்கு எதிர்ப்பே அல்லது ஆதரவே என ஒன்று கூடிய தீர்மானமும் எடுக்கவில்லை, முடிவும் எமது அமைப்பு எடுக்கவில்லை. இது அவர் தான்தோண்றித்தனமாக தனித்துவமான ஒரு கருத்தை விவசாய சமூகத்தின் மீது திணிப்பது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.
எனவே அவரும் அவர் சாந்தவரும் இதுபோன்ற எமது விவசாய சமூகத்தை இழிவுபடுத்தும் ஒரு அரசியல் நடவடிக்கையாக கொண்டுசெல்லும் ஒரு துர்பாக்கிய நிலமையை ஏற்படுத்தாமல் அவர்கள் அவர்களது தனிப்பட்ட கருத்துக்களை வழங்குவதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு. ஆனால் எமது விவசாய சமூகத்தின் கருத்துக்களாக திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எமது விவசாய அமைப்புகளில் மூன்று சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இருந்து வருகின்றனர். எனவே அதில் நாங்கள் கவனமாக கையாளவேண்டியுள்ளது என்பதுடன் எமது கூட்டத் தீர்மானத்தின்படியே பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கின்றோ.ம் தனிமனிதனாக முடிவு எடுப்பதில்லை. எனவே இவர் கூறிய கருத்துக்கும், விவசாயிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என உறுதியாக கூறுவதுடன், அவர் எந்த விவசாய அமைப்பிலும் பிரதி நிதியாக இல்லை’ என்றார்.








