Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் பற்றிலிருந்த நீர் பவுசர் வெலிமடை பிரதேச சபைக்கு மாற்றப்பட்டமைக்கு மாற்று வழி பெற்றுத்தருமாறு கோரிக்கை

ஏறாவூர் பற்றிலிருந்த நீர் பவுசர் வெலிமடை பிரதேச சபைக்கு மாற்றப்பட்டமைக்கு மாற்று வழி பெற்றுத்தருமாறு கோரிக்கை

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையிலிருந்த நீர் பவுசர் வாகனத்தை பெற்றுச் செல்ல நேற்று (20) காலை செங்கலடி பிரதேச சபைக்கு வருகை தந்த வெலிமடை பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை காட்டி வாகனத்தை வழங்குமாறு கோறியுள்ளனர்.

தற்போதைக்கு ஒரு மக்கள் சேவைக்கு ஒரு நீர் பவுசர் மாத்திரமே உள்ளது அதை வழங்க முடியாது என செங்கலடி தவிசாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று பி.பகல் வரை பல மணி நேர பேச்சுவார்த்தையின் பின் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற வெலிமடை பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டோர் ஏறாவூர் பொலிசாருடன் செங்கலடி பிரதேச சபைக்கு வருகை தந்திருந்தனர்.

பொலிசாருக்கும் செங்கலடி தவிசாளருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சரியான ஆவணங்களை வெலிமடை பிரதேச சபை வைத்திருப்பதையிட்டு இணக்கப்பாட்டுடன் வாகனத்தை வழங்க முன்வந்தனர்.

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்கு கடந்த 2018 ம் ஆண்டு வழங்கப்பட்ட 13000 லீற்றர் கொள்ளளவு கெண்ட நீர் பவுசரை நேற்று வெலிமடை பிரதேச சபைக்கு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக வெலிமடை பிரதேச சபை செயலாளரிடம் ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் அவர்கள் கையளித்தார்.

இது தொடர்பாக செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் திரு.மு.முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்,
வறட்சி காலத்தில் செங்கலடி பதுளை வீதி மக்களுக்காக நாள் ஒன்றிற்கு ஒன்று கிட்டதட்ட 100,000 லீற்றர் குடிநீரினை வழங்கி வருகின்றோம். இருப்பினும் எங்களிடம் உள்ள வாகன வசதி தற்போது பற்றாக்குறையாகவே உள்ளது. இது இவ்வாறு இருக்க இச்சுழ்நிலையில் 13000 கொள்ளளவு கொண்ட நீர் பவுசரினை மீழ பெற்று வெலிமடை பிரதேச சபைக்கு வழங்கிய நடவடிக்கை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதற்குரிய பதிலிட்டு வாகனமொன்றை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வழங்க மறுக்கும் பட்டசத்தில் பதுளை வீதி மக்களுக்கு போதியளவான குடிநீரினை வழங்கும் சேவை சாத்தியமில்லாமல் போகும் நிலை வரும் என தெரிவித்தார்.

அல்லாவிடின் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் செங்கலடி பிரதேச செயலமும் இணைந்து மக்களுக்கான குடிநீரை வழங்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன், மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் செய்யப்பட்டுள்ளனர். ஏன் அந்த பவுசரினை ஏறாவூர் பற்று பிரதேச சபையில் இருந்து வெலிமடை பிரதேச சபைக்கு மாற்றினார்கள் என்ற கேள்வி உள்ளது.

எங்களுக்கு இந்த செயற்பாட்டில் அரசியல் உள்ளதாக தெரிகின்றது. மட்டக்களப்பு மக்கள் மக்கள் இல்லையா?


கோப் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு எனக்கூறி அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கமைய இந்த பவுசர் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிசாருடன் வந்து இந்த பவுசரை எடுத்துச் செல்கின்றனர். நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் மக்களுக்கு குடிநீரை எவ்வாறு வழங்குவது. இதற்கான மாற்று வழி என்ன? அரசாங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இது தொடர்பில் உடன் கவனமெடுக்க வேண்டும் எனவும் நிலாந்தன் தெரிவித்தார்.

https://youtu.be/1eoOxXSbmZA
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!
மட்டு செய்திகள்

டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
Next Post
முத்தையன்கட்டு இளைஞன் உயிரிழந்த விவகாரத்தில் மற்றுமொரு இராணுவ சிப்பாய் கைது

முத்தையன்கட்டு இளைஞன் உயிரிழந்த விவகாரத்தில் மற்றுமொரு இராணுவ சிப்பாய் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.