மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில், காரிகை கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த (08) சிறப்பாக நடைபெற்றது.
2024 ஆம் ஆண்டு “புவி வெப்பமடைதலில் இருந்து விடுதலை பெறுவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற சித்திரப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.எல்.எம். றிபாஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
காரிகை கலை இலக்கிய மன்றத்தின் ஸ்தாபகத் தலைவி ஜாஹிதா ஜலால்தீன் மற்றும் செயலாளர் பௌஸியா நிசான் ஆகியோர் கடந்த வாரம் பாடசாலைக்கு சமூகமளித்து சான்றிதழ்களை அதிபரிடம் ஒப்படைத்ததையடுத்து, மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.












