இலங்கையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உலக தற்கொலை தடுப்பு தினம் 2025 ஒட்டி, மட்டக்களப்பு மாவட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான விளக்கவுரைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், ஊடகவியலாளர்கள் விழிப்புணர்வை பரப்ப முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மனநலம், சமூக ஆதரவு மற்றும் துல்லியமான தகவல் பரப்பல் மூலம் சமூக களங்கத்தை குறைத்து உயிர்களை காப்பாற்ற இயலும் என மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநல நிபுணர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலர் பங்கேற்றனர்.















