திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வீதிகளில் தெரு மின்விளக்கு பொருத்துதல் மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள மின்விளக்குகளை திருத்துதல் போன்ற நடடிக்கைகளில் திருக்கோவில் பிரதேச சபை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
திருக்கோவில் பிரதேச மக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக தவிசாளர் எஸ்.சசிகுமாரின் வழிகாட்டலில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிரங்குடா, தாண்டியடி உமிரி, கஞ்சிகுடியாறு, தம்பிலுவில் போன்ற பகுதிகளில் முதல் கட்டமாக தெரு மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


திருக்கோவிலில் உள்ள சகல பிரதேசங்களுக்கும் நேரடிக்கள விஜயம் மேற்கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்துவரும் தவிசாளர் சசிகுமார் அவற்றில் மிக முக்கியமானவற்றை நிவர்த்தி செய்து வருகிறார்.
இதேவேளை மக்களின் போக்குவரத்துக்கு இடையூராக மிகவும் மோசமான நிலையில் காணப்படும் வீதிகளை செப்பனிடும் பணியும் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன்கருதி தவிசாளர் சசிகுமார் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.








