கொழுப்பு மத்தியில் அமைந்துள்ள தமிழ் அரச பாடசாலையில் இடம்பெற்ற கொடூர சம்பவம் காரணமாக, நுகன் என்ற 7ஆம் வகுப்பு மாணவனின் கண்பார்வை மீண்டும் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நாளில், ஆசிரியை மாணவனிடம் ஒரு கேள்வி எழுப்பியபோது, மாணவன் வேறு பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழ் பாட ஆசிரியை கையில் இருந்த அலுமினிய அடிமட்டத்தை மாணவனை நோக்கி எறிந்துள்ளார். அது மாணவனின் கண்ணில் பட்டு கடுமையாக காயமடைந்ததால் இரத்தம் வழிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை தரப்பினரின் தகவலின்படி, மாணவனின் கண்பார்வை மீண்டும் கிடைப்பது சந்தேகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், மாணவனே கண்ணில் அடித்துக்கொண்டதாகக் கூறி பாடசாலை நிர்வாகம் வைத்தியசாலையில் அவரை அனுமதித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடைபெற்றது 10 நாட்களை கடந்துள்ள நிலையில், குறித்த ஆசிரியர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் தற்போது மாணவன் இலங்கை தேசிய கண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.










