வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகப் பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த குடும்பிமலை குமரன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, ஆலய பாதையில் இருந்த பற்றைக்காடுகள் முழுமையாக அகற்றப்பட்டன.
ஆலயத்தின் வருடாந்த உற்சவ காலங்களில் பெருமளவான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகை தருகின்றனர். இவ்வாறு புனித யாத்திரையில் ஈடுபடும் பக்தர்கள் சிரமமின்றி இறை வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்பதற்காக, ஆலய நிர்வாகிகள் தண்ணீர் வசதி ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதனை ஏற்று, ஆலய உற்சவ காலங்களில் பயன்பாட்டிற்காக தண்ணீர் வவுசர்கள் சபை ஊழியர்களால் வழங்கப்பட்டன. இதற்க்கு இடையூறாக இருந்த பற்றைக்காடுகள் தூய்மையாக்கப்பட்டன.
இதன் அடிப்படையில், பள்ளத்துச்சேனை விஸ்ணு ஆலயம், குடும்பிமலை குமரன் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களுக்கு தேவையான தண்ணீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


















