Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானை சைமா’ இலங்கை வருகை; பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானை சைமா’ இலங்கை வருகை; பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

57 minutes ago
in செய்திகள்

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘ரத்மலானை சைமா’ என அழைக்கப்படும் சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா எனக் கூறப்படும் குறித்த நபர், நேற்று (10) இரவு பேராதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மலேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் அமைப்பின் உதவியுடன் அவரை அண்மையில் கைது செய்துள்ளனர்.

அவருடன் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன், மூவரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

41 வயதுடைய பிரதான சந்தேகநபருக்கு எதிராக, 2014ஆம் ஆண்டு பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிகளைக் காட்டி ஒருவரை கடத்திச் சென்று காயப்படுத்தியமை மற்றும் 2016ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஏனைய இரு சந்தேகநபர்களும் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணியில் தலையில்லா முண்டமான என்புக்கூடுகளும் மீட்பு
செய்திகள்

செம்மணியில் தலையில்லா முண்டமான என்புக்கூடுகளும் மீட்பு

August 11, 2026
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; இம்ரான் மஹ்ரூப்
செய்திகள்

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; இம்ரான் மஹ்ரூப்

August 11, 2026
ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!
செய்திகள்

ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

August 11, 2026
கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!
செய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!

August 11, 2026
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை; ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம்!
செய்திகள்

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை; ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம்!

August 11, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா; விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா; விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!

August 11, 2026
Next Post
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; இம்ரான் மஹ்ரூப்

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; இம்ரான் மஹ்ரூப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.