Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை; ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம்!

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை; ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம்!

1 hour ago
in செய்திகள்

நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேனை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 255 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது, சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட சொத்து சேதங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூக கட்டமைப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவதன் அவசியம் குறித்தும் தேசிய செயற்பாட்டு சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்கும் முறைமை தொடர்பான சட்டத் திருத்தங்கள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், அவை விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போதைப்பொருள் வழக்குகளுடன் தொடர்புடைய அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 6,414 அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், சிறைச்சாலைகளில் கைதிகளின் வன்முறை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் அதிகளவிலான மனநல மருத்துவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையை தடுப்பது, ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பது, புனர்வாழ்வளிப்பது மற்றும் மீண்டும் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கிய தேசிய மூலோபாய வேலைத்திட்டத்தின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் ‘மிதுரு பாடசாலை’ வேலைத்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், அதிக போதைப்பொருள் அபாயம் காணப்படும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப்பொருளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை சமூக ஊடகங்கள் ஊடாக விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!
செய்திகள்

ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

August 11, 2026
கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!
செய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!

August 11, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா; விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா; விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!

August 11, 2026
குடிவரவு திணைக்கள கணினி அமைப்பு முடக்கம்; கடவுச்சீட்டு விநியோகத்தில் தற்காலிக தடங்கல்!
செய்திகள்

குடிவரவு திணைக்கள கணினி அமைப்பு முடக்கம்; கடவுச்சீட்டு விநியோகத்தில் தற்காலிக தடங்கல்!

August 11, 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு; ஜனாதிபதி – சட்டத்தரணிகள் சங்கம் நாளை முக்கிய சந்திப்பு!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு; ஜனாதிபதி – சட்டத்தரணிகள் சங்கம் நாளை முக்கிய சந்திப்பு!

August 11, 2026
லக்கலவில் கூரிய ஆயுதத் தாக்குதல்; 78 வயது நபர் உயிரிழப்பு!
செய்திகள்

லக்கலவில் கூரிய ஆயுதத் தாக்குதல்; 78 வயது நபர் உயிரிழப்பு!

August 11, 2026
Next Post
கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!

கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.