யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் காணி மோசடி வழக்கில் பெண் சட்டத்தரணி ஒருவர் நேற்று (06) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

முறையற்ற விதத்தில் காணி ஆவணங்களை தயாரித்ததாக வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த சட்டத்தரணி கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவர், வெளிநாட்டு பயணத் தடையுடன் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், குறித்த சட்டத்தரணியின் வீட்டில் நீதிமன்ற அனுமதி இன்றி தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை கண்டித்து யாழ்ப்பாணம் மற்றும் வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (07) ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.








