Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாமல் தலைமையிலான குழுக்களால் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் பாவனை; கந்தசாமி பிரபு

நாமல் தலைமையிலான குழுக்களால் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் பாவனை; கந்தசாமி பிரபு

8 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுக்கள் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப்பழக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையினை கேள்விக்குறியாக்கியவர்கள் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குற்றஞ்சாட்டினார்.

ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்கி, இளைஞர்களின் வாழ்க்கையினை அழித்தவர்கள், இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையினை மேம்படுத்தப்போவதாக கூறுவது நகைப்புக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.

உலக குடியிருப்பாளர் தினத்தினை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

அந்த அடிப்படையில் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தியாவெட்டுவானில் அமைக்கப்பட்ட வீடுகள் நேற்று (07) மாலை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் திலகநாதன்,கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளக உத்தியோகத்தர்கள், தேசிய வீடமைப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கந்தசாமி பிரபு,

உலக குடியிருப்பாளர் தினத்தினை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட முதல் கட்டமாக 70வீடுகளும் இரண்டாம் கட்டமாக 28வீடுகளும் அமைக்கப்பதற்கான நிதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டதாக 70 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வீடுகளை வீட்டின் உரிமையாளர்களிடம் கையளித்திருக்கின்றோம்.

அதனைவிட இந்த நாட்டில் இளைஞர்கள் போதைபாவனை தொடர்பான விடயங்களில் உள்ளீர்க்கப்பட்டு அதன்மூலம் அவர்களின் வாழ்க்கை இல்லாமல்செய்யப்பட்டு வருகின்றது. கடந்த கால அரசியல்வாதிகள் குறிப்பாக நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுக்கள் இந்த இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையினை இல்லாமல் செய்வதற்காக ஐஸ் போன்ற போதைப்பொருள் பாவனைகளை ஏற்படுத்தி அவர்களின் எதிர்காலத்தினை இல்லாமல் செய்யும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல் காலங்களில் அவர்கள் எமது கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தற்போது ஊடகங்கள் ஊடாக தான் இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையினை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக கூறிவருகின்றனர்.

ஐஸ் போதைப்பொருள் தொடர்பான தொழிற்சாலைகளை உள்ளூரிலேயே உருவாக்கி இளைஞர் யுவதிகளை அதற்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையினை அழித்தவர்கள் இன்று இந்த இந்த கருத்தினை முன்வைக்கின்றனர்.இளைஞர் யுவதிகளை வளப்படுத்தப்போவதாக இவர்கள் கூறுவது நகைப்புக்குரியதாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையில் அடிமையானவர்களை சீர்படுத்துவதற்காக மூன்று மில்லியன் ரூபா புனர்வாழ்வு மையம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையினை எடுத்துள்ளது.

ஐநாவில் ஜனாதிபதி உரையாற்றியிருந்த நிலையில் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு ஆதரவினை வழங்கியிருந்தார்கள்.

புதிய அரசாங்கத்தின் ஊடாக இலங்கையில் மனித உரிமை செயற்பாடுகள் மாற்றமடைந்துள்ளதை இன்று சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. சர்வதேச நாடுகளில் ஒத்துழைப்புடன் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கான சட்டங்களை மாற்றுவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

சர்வதேச நாடுகளில் ஆதரவுகள் இந்த அரசாங்கத்திற்கு இல்லையென எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டிருந்த நிலையில் இன்று அவர்கள் மௌனமடைந்துள்ளனர். மனித உரிமை விடயத்தில் சர்வதேச ரீதியாக ஆதரவு எங்களுக்கு பலமாக கிடைத்திருக்கின்றது.

ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பில் பலவித கருத்துகளை நாங்கள் தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்தோம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை இல்லாமல்செய்தல், ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல் தொடர்பில் நாங்கள் பேசியிருந்தோம். அந்தடிப்படையில் நாங்கள் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அண்மைகாலத்தில் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை குறைத்திருந்தோம். அதன்ஊடாக வீணடிக்கப்படும் நிதிகளை சேமித்திருக்கின்றோம். அதேபோன்று அதிகாரங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.

தற்போதுதான் நாங்கள் ஒரு வருடத்தினை கடந்திருக்கின்றோம். நாங்கள் அதனை செய்வதற்கு சட்டரீதியான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியுள்ளது. சட்ட திருத்தத்தினை மேற்கொள்ள நீடித்தகாலம் தேவையாகவுள்ளது. அரசியலமைப்பு ரீதியாகவும் மாற்றத்தினைக்கொண்டுவரவுள்ளது. இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி மிக விரைவில் நிறைவேற்று அதிகாரம் தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கடும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
செய்திகள்

கடும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

June 10, 2026
வயிற்றுக்குள் வெடித்த ஐஸ் போதைப்பொருள்; பேருந்து சாரதி உயிரிழப்பு
செய்திகள்

வயிற்றுக்குள் வெடித்த ஐஸ் போதைப்பொருள்; பேருந்து சாரதி உயிரிழப்பு

June 10, 2026
போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை அதிகரிப்பு
செய்திகள்

போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை அதிகரிப்பு

June 10, 2026
பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது யுத்தக் குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம்
செய்திகள்

பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது யுத்தக் குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம்

June 10, 2026
சலேவுக்கு ஆதரவான சத்தியாகிரகப் போராட்டம் இடைநிறுத்தம்
செய்திகள்

சலேவுக்கு ஆதரவான சத்தியாகிரகப் போராட்டம் இடைநிறுத்தம்

June 10, 2026
சரத் வீரவன்சவுக்கு வெளிநாட்டு பயணத் தடை
செய்திகள்

சரத் வீரவன்சவுக்கு வெளிநாட்டு பயணத் தடை

June 10, 2026
Next Post
மட்டக்களப்பில் போதையிலிருந்து இளைஞர்களை மீட்க 3 மில்லியன் நிதியில் புனர்வாழ்வு மையம்; கந்தசாமி பிரபு

மட்டக்களப்பில் போதையிலிருந்து இளைஞர்களை மீட்க 3 மில்லியன் நிதியில் புனர்வாழ்வு மையம்; கந்தசாமி பிரபு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.