Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்

கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நகைகள் களவாடப்பட்டதாக கணவரிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய 32 வயது குடும்பப் பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி, அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்-மஸ்லம் வீதி பகுதியில் உள்ள வீட்டில் சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டதாக 32 வயது குடும்பப் பெண் ஒருவர் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யூ.எஸ். நிசாந்த வெதகேவின் வழிகாட்டலில், பெருங்குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையில் பொலிஸ் குழுக்கள் துரித விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதில் அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸ் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ் மோப்பநாய் பிரிவு ஆகியவை பங்கேற்றன.

இருப்பினும், குறித்த வீட்டில் களவு நடந்ததற்கான சான்றுகளோ, 45 இலட்சம் ரூபாய் நகைகள் திருடப்பட்டதற்கான ஆதாரங்களோ எதுவும் கிடைக்கவில்லை.

விசாரணையின் தொடர்ச்சியில், முறைப்பாட்டாளரான அந்தப் பெண்ணில் சந்தேகம் ஏற்பட்டதால், பொலிஸார் கடந்த ஒக்டோபர் 3 ஆம் திகதி அவரை தீவிர விசாரணைக்கு அழைத்தனர்.

இதன் போது பல்வேறு உண்மைகள் வெளியாகின. அதன்படி, கணவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்ற நிலையில், தனியாக இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்த அந்தப் பெண், தனது கையிருப்பில் இருந்த பணம் மற்றும் நகைகளை பல்வேறு தேவைகளுக்காக செலவழித்திருந்தார்.

இந்நிலையில், கணவர் திடீரென நாடு திரும்புவதாக அறிவித்ததால் கலவரமடைந்த அந்தப் பெண், 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டதாக நாடகமாடி, கல்முனை பகுதியில் உள்ள பிரபல நகையகத்திற்குச் சென்று நகைகளை விற்றதை ஒப்புக்கொண்டார்.

இச்செயலைக் கண்டுபிடிக்காமல் தப்பிக்க, கணவர் வெளிநாட்டில் இருந்து திடீரென இலங்கை வருவதாகக் கூறி, நகைகள் திருடப்பட்டதாக நாடகம் அரங்கேற்றியதாக அவர் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட அந்தப் பெண் கைது செய்யப்பட்டு, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் உத்தரவிட்டார்.

பின்னர், சந்தேக நபரான அந்தப் பெண் சார்பில் இடைமனு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன் போது, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், கடும் எச்சரிக்கையுடன் அவருக்கு பிணையில் செல்ல அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
வாழைச்சேனை அஹமட் வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு

வாழைச்சேனை அஹமட் வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.