சாய்ந்தமருது லீடர் எம். எச். எம். அஸ்ரப் வித்தியாலயத்தில், சர்வதேச ஆசிரியர் தினம் 2025 அக்டோபர் 8ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழா பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் ஏற்பாட்டில், அதன் செயலாளர் யூ. எல். என். ஹுதா அவர்களின் நெறிப்படுத்தலில், தலைவரும் அதிபருமான எம். ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக பார்ட்னர்ஸ் போர் சேன்ஜ் இன்டர்நேஷனல் அமைப்பின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் றிசாத் செரீப் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் அஸ்மா ஏ. மலிக், மற்றும் விசேட அதிதியாக சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம். எம். எம். றபீக் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பு செய்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதிதிகள் தமது உரைகளில் ஆசிரியர்கள் சமூக முன்னேற்றத்தின் தூண்களாகவும், மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் வழிகாட்டிகளாகவும் உள்ளனர் என பாராட்டினர்.
விழாவில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து பாடல், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதியதிபர் எஸ். எம். சுஜான், உதவி அதிபர் எப். எம். ஆர். ஹாதிம், முன்னாள் செயலாளர் எப். எம். ரஹுபி, உறுப்பினர்கள் எம். ராபீன், ஏ. எல். எம். பாஹீம், எஸ். எல். ஷாமிலா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
























