கைது செய்யப்பட்டால் தன்னை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தை கோரிய முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (15) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.
கடந்த அரசாங்க காலத்தில் விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நடத்திய விசாரணை தொடர்பாக வாக்குமூலமளிக்க மனுஷ நாணயக்கார அழைக்கப்பட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனுஷ நாணயக்கார,
எங்களைப் போன்றவர்களாலேயே ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தில் உள்ளார்.
நாட்டைக் காப்பாற்றிய ரணிலைப் பழிவாங்கினர். இப்போது என்னைப் பழிவாங்குகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.








