வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு எதிராக இன்று (23) நாடாளுமன்றத்தில் சிலர் கருப்பு உடை மற்றும் சிலர் கருப்பு பட்டி அணிந்து ஐக்கிய மக்கள் சக்தியினர் வருகை தந்துள்ளனர்.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, பிரதேச சபை தலைவரின் கொலைக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டுவதன் மூலம் அரசாங்கம் கொலையை விசாரிப்பதைத் தவிர்க்கிறது என்றும், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், உண்மையான கொலையாளிகளைக் கைது செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரவும் இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.








