Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கெஹெல்பத்ர பத்மேவை எனக்குத் தெரியாது; சி.ஐ.டி விசாரணை பின்னர் ஸ்ரீமாலி பொன்சேகா விளக்கம்

கெஹெல்பத்ர பத்மேவை எனக்குத் தெரியாது; சி.ஐ.டி விசாரணை பின்னர் ஸ்ரீமாலி பொன்சேகா விளக்கம்

11 months ago
in செய்திகள்

கெஹெல்பத்ர பத்மேவை எனக்குத் தெரியாது. ஊடகங்களில் பரவிய செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என்று பிரபல நடிகையும் மொடல் அழகியமான ஸ்ரீமலி பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போது பொலிஸ் காவலில் உள்ள ஒரு குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு இருப்பதாக அண்மைக்காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் நடிகை ஸ்ரீமாலி பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

கெஹெல் பத்ர பத்மே மீதான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.

கெஹெல் பத்ர பத்மேயுடன் நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா இருக்கும் புகைப்படம் வெளியானதை தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் பிரபல நடிகையும் மொடல் அழகியமான ஸ்ரீமலி பொன்சேகா கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றுள்ளார்.

அதன்பின்னரே ஊடகங்களிடம் இது தொடர்பில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கெஹெல் பத்ர பத்மேவுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்படும் கூற்றுக்களை நிராகரிக்கின்றேன்.

கெஹெல் பத்ர பத்மேவை தனக்குத் தெரியாது. ஒரு முறை துபாயில் என் குடும்பத்துடன் ஒரு புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டேன், பலர் எங்களுடன் புகைப்படம் எடுத்தார்கள் – அவர் அவர்களில் இருந்தார்.

சமூகவலைத்தளங்களில் என்ன சொல்லப்படுகிறது என்பது எனக்குத் தெரியும், ஆனால் வதந்திகள் என் பெயரையோ அல்லது நம்பிக்கையையோ கெடுக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை – கடந்த வாரம் இதேபோன்ற மொடல் பியூமி ஹன்சமாலி மீதும் விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை
அரசியல்

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

September 14, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!

September 14, 2026
ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!
செய்திகள்

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!

September 14, 2026
ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

September 14, 2026
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!
காணொளிகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!

September 14, 2026
சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!
செய்திகள்

சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!

September 14, 2026
Next Post
வேலணையில் அனுமதியின்றி கட்டடங்களை நிர்மாணிக்க தடை

வேலணையில் அனுமதியின்றி கட்டடங்களை நிர்மாணிக்க தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.