Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!

40 minutes ago
in காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மயிலத்தமடு–மாதவனை பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தரக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டம் 1092 நாட்களை கடந்துள்ள போதிலும், தங்களது கோரிக்கைக்கு இதுவரை நிரந்தர தீர்வு வழங்கப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கான மேய்ச்சல் தரையை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள பண்ணையாளர்கள், இது தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில்நேற்று முன்தினம் (12) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நிலம் தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் எதுவும் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும், அப்பகுதியில் இடம்பெறுவதாகக் கூறப்படும் குடியேற்றம் மற்றும் காணி பயன்பாட்டு மாற்றங்களினால், தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பயிர்ச்செய்கை மற்றும் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக கால்நடைகளை மேய்ப்பதற்கு தேவையான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், இதனால் தங்களது நீண்டகால வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில், தங்களது அறவழிப் போராட்டம் மூன்று வருடங்களை நிறைவு செய்வதை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக முன்வைத்து வரும் மேய்ச்சல் தரைக் கோரிக்கைக்கு இனியும் காலதாமதமின்றி நிரந்தரத் தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் என பண்ணையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!
செய்திகள்

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!

September 14, 2026
ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

September 14, 2026
சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!
செய்திகள்

சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!

September 14, 2026
சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்
அரசியல்

சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்

September 14, 2026
“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா
அரசியல்

“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா

September 14, 2026
இந்த ஆண்டில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவு; 74 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

இந்த ஆண்டில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவு; 74 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.