யாழ்ப்பாண விமான நிலைய புனரமைப்பிற்காக 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
140000 மாற்றுத் திறனாளிகளுக்கு 10000 ரூபாய் வழங்க முன்மொழிவு.
டிஜிட்டல் தொடர்பு கோபுரங்களுக்கு ஐந்து ஆண்டு வரிச் சலுகைகள்.
இணைய கட்டணங்களின் போது செலுத்தப்படும் சேவைக் கட்டணங்கள் நிறுத்தப்படும்.
அதிபர்களுக்கான நிர்வாக கொடுப்பனவு 1500 ரூபாய்யால் அதிகரிக்கும்.
கஷ்டப் பிரதேச ஆசிரியர்களின் கொடுப்பனவு 1500 ஆல் அதிகரிக்கும்.
முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்க புதிய சட்டம் இயற்றப்படும்.
பட்ஜெட் உரை – ஜனாதிபதி.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவு 10000 ரூபாயாகவும் மாணவர் உதவு தொகை 9000 ஆகவும் கிடைக்கும்.
கல்வியியல் கல்லூரி மாணவர்களின் உதவுதொகை மேலும் 2500 ஆல் அதிகரிக்கும்.
செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த 3000 மில்லியன் ஒதுக்கீடு.
29/2019 சுற்றறிக்கையின் படி தகைமை பெற்ற பல்வேறு நிறுவனங்களில் 6 மாதங்களுக்கு மேலாக பணியாற்றும் அனைத்து தற்காலிக, அமைய, மாற்று, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேர்க்கப்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க முன்மொழிவு.
அரச ஊழியர்களின் இடர்கடன் முற்பணத் தொகை நான்கு லட்சம் வரை அதிகரிக்க முன்மொழிவு.
ஒழுங்காக கடமைக்குச் செல்லும் ஊழியர்களுக்கு 10000 ஊக்கத் தொகை.
25 நாளும் செல்ல வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக பத்தாயிரம் மில்லியன் ஒதுக்கீடு.
தூர சேவைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 புதிய பஸ்களை கொள்வனவு செய்ய 3,600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
கிராமிய வீதி அபிவிருத்திக்கு 24,000 மில்லியன் ரூபா. கிராமிய பாலங்கள் அபிவிருத்திக்கு 2500 மில்லியன் ரூபா –
அரச ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பிற்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி முதல் வழங்கப்படும்.
அரச ஊழியர்களுக்கான பண்டிகை முற்பணம் தற்போதைய ரூ.10,000 இலிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.
அரச சேவைக்கு 75,000 பேரை உரிய முறைமையின் கீழ் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரச சேவை வெற்றிடங்களுக்கு போட்டி பரீட்சை அடிப்படையில் ஆட்சேர்ப்பு.
பொது நிர்வாக சுற்றறிக்கை 25/2014 மற்றும் பொது நிர்வாக சுற்றறிக்கை 29/2019 இன் கீழ் தகுதிகளைப் பூர்த்தி செய்து, பல்வேறு நிறுவனங்களில் 6 மாதங்களுக்கும் மேலாகப் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கான முன்மொழிவு.
2026 வரவுசெலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்தமை.








