மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மண்முனை பற்று கலாச்சார மண்டபத்தில் இன்று (21) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஆரம்பமானது.
இதில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் கலந்துகொண்டு பொதுச்சுடர் ஏற்றி, மலர்தூவி நினைவேந்தல் செய்தனர்.
இன் நிகழ்வு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசியமைப்பாளர் சுரேஷ் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதேச மக்கள், சமூகசேவையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களும் பங்குபெற்று, அமைதியான முறையில் நினைவேந்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.






















