சவளக்கடையில் நேற்று முன்தினம் இரவு (20) இடம்பெற்ற விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மண்டூர் வீரமுனை வீதி சவளக்கடைப் பகுதியில் இரவு 8.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 16 வயதுடைய மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்து கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சவளக்கடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








