Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழினத்தின் இறைவன் பிரபாகரன்; நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி

தமிழினத்தின் இறைவன் பிரபாகரன்; நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவேதான் அவரை தமிழ் மக்கள் இறைவனாகப் போற்றுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு தமிழ் இனத்தின் இறைவனான வே.பிரபாகரனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சிபுரிந்தானே அன்று தமிழீழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று காலை விடிந்ததென்று பாடு சங்க காலம் திரும்பியது ஆடு”

தமிழ் இனத்தின் தேசியத் தலைவனது ஆட்சியை வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப்பரப்பில் வாழ்ந்த தமிழ் மக்கள் இவ்வாறாகத்தான் கொண்டாடினார்கள்.

மேதகுவின் ஆட்சியில் கடலிலே இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களும் அடாவடிகளும் இருக்கவில்லை. சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இருக்கவில்லை. மீனவர்கள் மகிழ்ச்சியாகக் கடற்றொழிலில் ஈடுபட்டனர்.

காணி அபகரிப்புக்களும் இல்லை. எனவே தமிழர் தாயகம் விவசாயத்திலும் செழித்திருந்ததது. போதைப் பொருட்கள் அறவே இல்லை. நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாக உலவக்கூடிய நிலையிருந்தது. தாயகப்பரப்பில் மக்கள் தன்னிறைவு பெற்று பாதுகாப்பாக வாழ்ந்தனர்.

எனவேதான் தமிழ் மக்கள் மேதகு அவர்களை இறைவனாகவும், அவரது ஆட்சிக் காலத்தினைச் சங்ககாலமாகவும் போற்றுகின்றனர்.

அந்த தமிழ் இனத்தின் இறைவனுக்கு இன்று பிறந்தநாள். இந்த உயரிய சபையிலே மேதகு அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!
செய்திகள்

அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

June 17, 2026
அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு
உலக செய்திகள்

அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு

June 17, 2026
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்
செய்திகள்

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்

June 17, 2026
யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

June 17, 2026
ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி
செய்திகள்

ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி

June 17, 2026
யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி
செய்திகள்

யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி

June 17, 2026
Next Post
இலங்கை தமிழர்களின் வரலாற்றை மொத்தமாக இல்லாது ஒழிக்க முயற்சியா?

இலங்கை தமிழர்களின் வரலாற்றை மொத்தமாக இல்லாது ஒழிக்க முயற்சியா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.